காதல் சோலை

உச்சிமுதல் பாதம்வரை பூவைப்போலவே இருப்பதற்கு
பேசாமல் நீ பூவாகவே பிறந்திருக்கலாம்...

உன்னால் மட்டும் ஏன் புரிந்துகொள்ளமுடிவதில்லை
தேவைகளற்று உன்னுடன் நான் கடத்தும் நொடிகளை...

நீ ஒதுக்கி விடுகையில் கற்றை முடி கூட‌
பூஞ்சோலை ஆகிவிடுகிறது...

ஆப்பிள்கள் சுவைதான் என்றாலும்
நீ கடித்த ஆப்பிள்கள் திகட்டுவதே இல்லை... 

நீ நில்லாத‌ பேருந்து நிழ‌ற்குடைக‌ள்
த‌லைகுனிந்து நிற்கின்ற‌ன‌...
நீ நிற்ப‌வைக‌ளோ உன்னைப்பார்த்த‌ வெட்க‌த்தில்
த‌லை சாய்த்துக்கொள்கின்ற‌ன‌...

lawsuit advances