நீ
கண்ணில் பட்டாய்...
கவிதைக்கு
பிள்ளையார் சுழி....!!
நீ
என்னில் வந்தாய்..
கவிதை காகிதமாய்
விண்ணில் நான்...!!
தீ
முத்தம் பரிசளித்தாய் திரையரங்கில்...
டைரி பக்கங்கள்
கவிதைகளால் காலியானது..!!
நீ
கை பிடித்தாய் மனைவியாகி...
கவிதை பேனா மை
உறைந்தது மின் விசிறி காற்றில்..!!
ஏங்கிய
கவிதையே கிடைத்த பின்
கவிதை எதற்கு...?
