ஒரு
காதல்கூட
பெற முடியாத
காதல் மலடி
என் கவிதைகள்..!!
உனக்கெழுதிய
கவிதைகளை
இன்று
ஊரே
காதலிக்கிறது..!!
நீ கடைசியாய்
அழ வைத்து சென்ற
பூங்கா இருக்கையில்..
இன்று
வேறு காதலர்கள் சிரித்தபடி...?!
என் இரவுகளை
நரகாக்க....
எங்கிருந்தோ....
எப்படியோ....
கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
பெண்ணொருத்தியை
உன் சாயலில்...!!
உனக்கு
சொர்க்கம்தான் சந்தேகமில்லாமல்...
நரகத்தைதான்....
இங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறாயே...??!
