என்னவளுக்காக ஒரு கிறுக்கல்...

கதிரவனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளுக்காக பகலில் நீ வெளிச்சம் தருவதால் !

சந்திரனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முகம் போல் நீ இருப்பதால்!

மீன்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் விழி அழகின் முன் தோற்றதால்!

மான்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளை கண்டு மலைத்து உங்கள் ஓட்டம் நின்றதால்!

மலர்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் வாசனையை கேட்டு மன்றாடியதால்!

முயலே,உனக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் பருவச் செழிப்பின் துள்ளலை பார்த்து நீ வெட்கப்பட்டதால்!

தேனீக்களே,உனக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
தேன் எடுக்க என்னவளின் உதட்டை தேடியதால்!

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்...

உன் பார்வை
கொஞ்சம் விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும் ....

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும் ...

நீ
செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும் ...

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால்
என் தட்டு சோறு கிடைக்கும் ....

ஒட்டுப்பொட்டை
தவற விட்டால்,
என் புத்தகம் தேடு,
கிடைக்கும் ...

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்...

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும் தலைகள்
முளைக்கும்...

நீ
அழகிப் போட்டியில்
கலந்து கொண்டால்
அழகே தோற்றுப் போகும் ...

நீ
முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்...

நீ
சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்...

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி...

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்தால்
பகலில் நடுநிசி...!!!

நண்பனின் கண்ணில்

நெருப்பாய் இருக்கும்.

பெண்களை ரசிக்கும்
நண்பனின் கண்ணில்
என் தங்கை படுவாலோ...?

என நிணைக்கையில்...

சலங்கை ஒலி...

என்
சலங்கையில்
நிரப்பி
வைத்திருக்கிறேன்
உனக்கு
நான்
கொடுக்க
இருக்கும்
முத்தங்களின்
சப்தத்தை...

காதல் பிறந்தது....

கோவிலில்
எல்லோரும்
கண்
மூடி
இருக்கையில்
நான்
பாதி
கண்ணை
திறந்தேன்
நீ
பாதி
கண்ணை
திறந்தாய்
நாம்
ஒரு
முடிவுக்கு
வந்தோம்
கொங்கு கவியன்

காதலை தவிர...

காதலர்
தினத்தன்று
காதலை சொல்லவில்லை
என்று
SMS'ல்
கோபிக்கிறாய்...
உன்னிடம்
நான்
காதலை
தவிர
வேறு
எதையுமே
சொன்னதில்லையே
இதுவரைக்கும்....
கொங்கு கவியன்

காதல்

என் நாட்குறிப்பை
நான் அறியாமல்
ரகசியமாய் திறந்து
அவள் நினைவை
பத்திரமாக
எழுதி வைக்கும்
காதல்....

கொங்கு கவியன்

பூக்கள்

காலை முதல்
மாலை வரை
சிரித்தேன் ....
கிடைத்தது
மரண தண்டனை ....
---- உதிர்ந்து போன பூக்கள்

கொங்கு கவியன்

அவள் கொலுசு

இன்று
இசை கல்லூரி
விடுமுறை....

அவளின்
கால்
கொலுசு
தொலைந்ததால்!!!

அம்மா

எனக்கு காய்ச்சல்,
ஆனால்
நெருப்பாய் கொதிக்கும்
அவளின்
மனது....
அவள்
தான்

"அம்மா"

காற்றில் கூட

காற்றில்
கூட
அவள்
இருக்கிறாள்
என்பதை
உணர்தேன்..!
தூசியாய்
வந்து
என்
கண்ணை
கலங்க
வைத்த போது……

குளிர்கிறதே

அக்னி
வெயிலில்
நடக்கையில்
எனக்கு
மட்டும்
குளிர்கிறதே…
உன்னை
பார்க்க வருவதனாலா??

நிறுத்தி விடாதே

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊஞ்சலடுபவலே...
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…

கொங்கு கவியன்

நெஞ்சில் நீ ஏறினால்

காலில்
முள்
ஏறினால்
இரத்தம்
மட்டுமே...
என்
நெஞ்சில்
நீ
ஏறினால்
நித்தம்
யுத்தமே....


கொங்கு கவியன்

புரியாமலா போகும் என்னவளுக்கு என் காதல்

என்றாவது
என் தோழி
புரிந்துகொள்வாள்
அவள் மேல்
காதல்
வர கரணம்
என்ன என்று
அதனால்
அவளோடு நான் வாழ்ந்த....
இல்லை இல்லை
அவளால் நான்
வாழ்ந்த நாட்களின்
சந்தோசத்தை
இங்கு தூறல்
போல் துவிகொண்டிருகிறேன்
புரியாமலா போகும்
என்னவளுக்கு என் காதல்

கொங்கு கவியன்

நீ .....நீ .....நீ .....

நீ பூமிக்கு வந்த தேவதை ...
நடைபழகும் நிலா ...
நட்சத்திரங்களின் தோழி ...
பூக்களின் ராணி ...
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை அந்நியப்படுத்த
விரும்பவில்லை...!

நீ .....

என் நிழலின் பாதி
நிஜத்தின் மீதி ...

என் விரலின் நகம் ...
நகத்தின் நிறம் ...

இதயத்தின் பாதை ...
துடிப்புகளின் ரேகை ...

இமைகளின் கண்கள் ...
கண்களின் பார்வை ...
நடமாடும் உடல்...

உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்..!!!

கொங்கு கவியன்

என் உயிரில் கலந்து வைத்தேன்

காகிதத்தில் எழுதிவைத்தால்

கரையான் அரித்து விடும்.

உடம்பில் குத்தி வைத்தால்

மண்ணோடு மறைந்து விடும்.

கல்வெட்டில் பதித்து வைத்தால்

காலம் அழித்து விடும்.

நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து

வானில் கூட எழுதி வைப்பேன்...

பாவம்!

அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.

அது சரி,

காட்சிப் பொருளா நீ?

கண்ட இடத்தில் எழுதி வைக்க!

அதனால் தான் அன்பே,

உன்னை

என் உயிரில் கலந்து வைத்தேன்

கொங்கு கவியன்

lawsuit advances